கருக்கலைப்பு செய்து 7 மாத சிசு எரித்து கொலை - 5 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்து 7 மாத சிசுவை எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 7 மாத கர்ப்பம் ஆக்கியுள்ளார். மேலும், வயிற்றில் உள்ள கருவை கலைத்து விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் சாய் சிவா கிளினிக் என்ற தனியார் மருந்தகத்தில் 7 மாத சிசுவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 17 வயது சிறுமியின்  உறவினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 7 மாத சிசுவை கொன்று எரித்தது தெரியவந்தது. 

இதனையடுத்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பகுதியில் உள்ள சாய் சிவா கிளினிக் உரிமையாளர் சிவா ஆனந்த், செவிலியர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 7மாத சிசுவை எரித்துக் கொன்று தேவபாண்டலம் மயானத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

Night
Day