குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்த ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலா புறமும் பறக்கவிட்டு பெங்களூரு வீரர் வில் ஜாக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். அகமதாபாத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 200 ரன்களை எடுத்தது. 201 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் 24 ரன்களில் ஆட்டமிளந்தார். தொடர்ந்து, களமிறங்கிய வில் ஜாக்ஸ், விராட் கோலியுடன் கைக்கோர்த்து, சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 41 பந்துகளில் சதமடித்து வில் ஜாக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். இப்போட்டியில் 6 நிமிடத்தில் அரைசதத்தை சதமாக மாற்றி ஜாக்ஸ் அசத்தினார்.

Night
Day