மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,290 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 63 ஆயிரம் கன அடியில் இருந்து 75  ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,290 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது, அணையின் நீர் இருப்பு 82.34 டிஎம்சியாக உள்ளது.

Night
Day