மாமன்னர் பூலித்தேவனின் 310-வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்துச் செய்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய சுதந்திரத்திற்காக, முதன்முதலில் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவனின் 310-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவன் காட்டிய அதே வழியில், ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்திற்காக முதன்முதலில் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவனின் 310-வது பிறந்தநாளினைக்  கொண்டாடும் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வரலாற்றில் முதன்முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் என்றும், இன்றைக்கு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முதன்முதலில் விதை போட்டவர் மாமன்னர் பூலித்தேவன் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

நெற்கட்டும் செவலை பூர்வீகமாக கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன், அனைத்து குறுநில மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்த வீரத்தமிழர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

1857ம் ஆண்டு இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்படுபவர் மாமன்னர் பூலித்தேவன் என்றும், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்ட மாமன்னர் பூலித்தேவன், தனது நிர்வாகத் திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள் - மேலும், பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சாதி பேதங்களை கடந்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர் - ஒண்டிவீரன் பகடை மற்றும் வெண்ணிக்காலாடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மாமன்னர் பூலித்தேவன் காட்டிய அதே வழியில், ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்துடனும் செயலாற்றினால் எதிலும் வெற்றி காண முடியும் என மாமன்னர் பூலித்தேவனின் 310-வது பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day