பெண்கள் தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. 

கரூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளதாகவும், செல்போனில் மூழ்கி ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது என்றும், ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Night
Day