தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயாரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த்தின் மாமியாரும், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் தாயாருமான திருமதி அம்சவேணி அவர்கள் வயது மூப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
தங்களது தாயாரை இழந்து வாடும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திரு.எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.