நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 14 ஆம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. நெல்லை மாவட்டத்தில், 'அகஸ்திய மலை மக்கள் சார் இயற்கை மையம்' சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. குளம் உள்ளிட்ட 60 நீர்நிலைகளில் நேரடி களஆய்வு செய்து, உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது. கூழக்கடா, செங்கால் நாரை, அரிசி மூக்கன் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day