தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கிராம பகுதிகளுக்குள் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இருக்கும் கிராமங்களான வல்லம், கண்ணுபுளிமெட்டு, மோட்டை, இரட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒற்றை காட்டு யானை புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டாலும், வனத்தில் தண்ணீர் இல்லாததால் அந்த ஒற்றை காட்டு யானை விவசாய பகுதிகளையே சுற்றி வருவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள், மாலை நேரங்களில் விவசாயப் பகுதிகளுக்கும், மலை அடிவாரப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...