திருவாரூர்: மனுநீதி சோழனின் கல்தேர் நினைவிடம் வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் மனுநீதி சோழனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்தேர் நினைவிடத்தை பூட்டிவைத்து வாகன நிறுத்துமிடமாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
தேரை ஓட்டி கன்றை கொன்ற காரணத்திற்காக தன் மகன் என்றும் பாராமல் தேரை ஏற்றி கொலை செய்து, நீதி வழுவாமல் ஆட்சி செய்த மனுநீதி சோழன் நினைவாக கல்தேர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த நினைவிடத்தை புரனமைக்க 9 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும், கடந்த 2 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் திமுக நகராட்சி நிர்வாக அனுமதியோடு நினைவிடமானது வேன் மற்றும் கார் நிறுத்துமிடமாகமாறி வருவது மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day