தாமரையை பாஜக சின்னமாக ஒதுக்கீடு செய்ததற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய மலரான தாமரையை பாஜக சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனக்கூறி, சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கின் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. வழக்கின் உண்மை தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரத்தை சட்டபணிகள் ஆணயக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள் மீத தொகையை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.

Night
Day