தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Night
Day