சென்னை டி.பி.ஐ வளாகம் முற்றுகை - இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் 6வது நாளாக நீடிக்கிறது. டி.பி.ஐ வளாகத்தை இன்று முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள், கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத விளம்பர அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், விளம்பர திமுக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, கடந்த 26ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 6வது நாளான இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி விளம்பர திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Night
Day