கோவை: மலைப்பாதையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பாதையில் அரசு பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து ஆனைக்கட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மலைப்பாதையில் திடிரென ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார். பேருந்தை தொடர்ந்து வந்த காட்டு யானை, 15 நிமிடங்களுக்கு பின் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை வழிமறித்ததால் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

Night
Day