குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

varient
Night
Day