எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புரட்சித்தலைவி அம்மாவுக்கு எல்லாமாக இருந்து கண்ணை இமை காப்பது போல காத்து வந்தவர் தான் புரட்சித்தாய் சின்னம்மா. தனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள். அப்படிப்பட்டவரை பற்றி எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாத திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன், அவதூறாக பேசியிருப்பது கோடிக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இந்நிலையில் குடியாத்தம் குமரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், குடியாத்தம் குமரன் மீது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் கழக நிர்வாகி கிரைஸ்ட் மில்லர் தலைமையில் ஏராளமான பெண்கள் புகார் அளித்தனர். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று, அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து முன்னினேறி வரும் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.