எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்களோடு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கொண்டாட உள்ளார்.
இது தொடர்பாக கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்சித்தலைவி அம்மா கிறிஸ்தவப் பெருமக்களோடும், கழகத்தொண்டர்களோடும் கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்புடன் கொண்டாடினார்கள். அதே போன்று இந்த ஆண்டு கழகப்பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வரும் 23ம் தேதி திங்கள்கிழமையன்று காலை 11 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலை நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசு குடில் முன்பாக நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், கிறிஸ்தவ பெருமக்கள், ஆதரவற்ற முதியவர்கள், கழக நிர்வாகிகள், கழகத்தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.