ஓட்டுநரை காலணியால் தாக்கிய உதவி மேலாளர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை காலணியால் தாக்கிய துணை மேலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. பேருந்தை எடுப்பதற்கு தாமதமான நிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் பேருந்தை எடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு, மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்தை எடுக்க முடியும் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் தெரிவித்ததை தொடர்ந்து பயணிகள் அனைவரும் துணை மேலாளரிடம்  பேருந்தை விரைவாக எடுக்க ஒட்டுநருக்கு உத்தரவிடுமாறு கூறியுள்ளனர். அப்போது, ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் வேறு பேருந்தில் செல்லுமாறு துணை மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளை தூண்டி விடுகிறாயா? என கேட்டு ஓட்டுநரை துணை மேலாளர் மாரிமுத்து காலணியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில்,  துணை மேலாளார் மாரிமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல  போக்குவரத்து  நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day