இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிலுவைபுரம் பகுதியில் என்எல்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ராமநாதன் என்பவர் சிதம்பரத்திலிருந்து பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். எதிர் திசையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சுந்தரேசன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.

Night
Day