எம்.ஜி.ஆர் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா நடந்து சென்று பார்வையிட்டார்.

அப்போது அப்பகுதியிலுள்ள மூதாட்டிகள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தங்கள் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்ணீர் மல்க எடுத்துக்கூறினர். அவர்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அரிசி, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.



Night
Day