இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் புலம்பெயர்ந்தோராக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.

கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ், அவரது மனைவி பாத்திமா பர்ஹானா, குழந்தைகள் முஹம்மது யஹ்யா, அலிஷா, அமிரா ஆகிய 5 பேர்  தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் அதிகாலை வந்திறங்கினர். தகவலறிந்து வந்த மெரைன் போலீசார், 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்‍கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், முஹம்மது கியாஸ் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி தர முடியாததால் தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர், 5 பேரும் மண்டபத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

Night
Day