அவலாஞ்சியில் கனமழை - சூழல் சுற்றுலா மையம் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.  

தென் மேற்குப் பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியான அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அவலாஞ்சியில் உள்ள சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கேட்டுக் கொண்டுள்ளன. 

Night
Day