அரசு பேருந்தை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, அரசு பேருந்தை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கூடலூர் அருகே ஓவேலி மூலக்காடு பகுதி வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த காட்டு யானை ஒன்று, அரசு பேருந்தின் முன்பக்கத்தை தாக்கியது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சிறிது உடைந்து சேதமடைந்தது. இருப்பினும், சுதாரித்து கொண்ட ஓட்டுனர் தொடர்ந்து ஹாரன் எழுப்பியதால் காட்டு யானை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். 

Night
Day