க்ரைம்
காணாமல் போன ரூ.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ரவுடி நாகேந்திரனின் மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்ததாகவும், அதே போல் தனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...