கங்கை நதியில் 5 வயது சிறுவனை மூழ்கடித்த அத்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புனித கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என்று கூறி 5 வயது சிறுவனை நீரில் மூழ்க வைத்தபோது உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. டெல்லியை சேர்ந்த தம்பதியின்  5 வயது மகன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றோர், புனித கங்கையில் நீராடினால் ரத்த புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர். அதன்படி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாருக்கு சென்று அனைவரும் கங்கை நதியில் இறங்கியுள்ளனர். அப்போது  சிறுவனை அவனது அத்தை நீரில் முக்‍கியபோது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

Night
Day