ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு-மோடி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் இவ்வாறான  கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் ராபர்ட் பிகே விரைவில் குணமடைய தான் வாழ்த்துவதாகவும், ஸ்லோவாக்கிய மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

Night
Day