கடும்வெயில் - 6 நாட்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும்வெயில் காரணமாக பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் வெயில் 50 டிகிரி செல்சியசை தாண்டி கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்துள்ளது. இதனிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கடந்த 6 நாட்களில் மட்டும் 568 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

varient
Night
Day