இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா போர் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த சூழலில் போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் கைது வாரண்ட் பிறப்பிக்கும எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், போர்க்குற்றம், பயங்கரவாதம்,  உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்ம் சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day