ராகுல் பங்கேற்ற மேடை திடீரென கீழே சரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்த மேடை பாரம் தாங்காமல் சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலம் பாலிகஞ்சு என்ற பகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தியை ஆதரித்து ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் அனைத்து தலைவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்த போது, பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. இதில் நல்வாய்ப்பாக மேடையில் இருந்த ராகுல் காந்தி,  வேட்பாளர் மிசா பார்தி உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

varient
Night
Day