மம்தா பானர்ஜி தனித்து போட்டி : மேற்குவங்கத்தில் திரிணாமூல் தனித்து போட்டியிடுவதால் இந்தியா கூட்டணியில் குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் காங்கிரஸ் கட்சியுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தான் நடத்தவில்லை என்றும், மேற்கு வங்கத்தில் தனித்தே போராடுவோம் என தொடக்கத்தில் இருந்தே கூறி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், மதசார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் தனித்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்துவோம் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

Night
Day