நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி இன்று வரை என 19 நாட்கள் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி காற்று மாசு, திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. 19 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, விக்‌ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் அதாவது விபி-ஜி ராம்-ஜி என பெயர் மாற்றி மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்றிரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மக்களவை இன்று காலை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார். 

இதேபோல் மாநிலங்களவையிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

Night
Day