இன்றுடன் முடிவடையும் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் முடிவடைய உள்ளதையடுத்து இன்று டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 22-ம் தேதி முதல் 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் அவரது காவல் முடிவடை உள்ளதையடுத்து, இன்று பிற்பகல் டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day