'ராவணன் பற்றிய கேள்வி வேண்டாம்' - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர் கோவில் திறப்பன்று ராவணன் பற்றிய கேள்வி வேண்டாம் என ராகுல் காந்தி குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல் காந்தியை அசாமில் உள்ள கோவிலுக்குள் ஏன் அனுமதிக்கவில்லை என ஹிமந்தா பிஸ்வாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஏன் ராவணனைப் பற்றி பேசுகிறீர்கள் என வினவிய அவர், குறைந்த பட்சம் இன்றாவது ராமரைப் பற்றி பேசலாம் என்றார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமரைப் பற்றி பேசுவதற்கான இந்த நல்ல நாளில் ராவணனைப் பற்றி பேச வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். அசாம் முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day