ஹர்தீப் சிங் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் : இந்திய அரசிடம் சில வாரங்களுக்கு முன்பே பகிர்ந்து விட்டதாக ட்ரூடோ தகவல்
Sep 23 2023 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை சில வாரங்களுக்கு முன்பே டெல்லியுடன் பகிர்ந்து கொண்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய கனடா அரசு தயாராக இருப்பதாகவும் அதேபோல் இந்திய அரசும் செயல்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் குறித்து கனடாவுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.