இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவது சரியல்ல : வெறுப்புணர்வுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என கனடா அரசு திட்டவட்டம்
Sep 23 2023 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் செயல் ஏற்புடையதல்ல என்றும் வெறுப்புணா்வுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்துகளுக்கு எதிராக பகிரப்படும் வீடியோ புண்படுத்தக் கூடியது மற்றும் வெறுக்கத்தக்கது என்றும் அனைத்து கனடா நாட்டவா்களுக்கும் அவமானகரமானது எனக் கூறியுள்ளது. வெறுப்புணா்வுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது என்றும் மிரட்டல் அல்லது அச்சத்தை உருவாக்குதல் போன்ற செயல்களுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.