இந்த வாரம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்யும் : இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தகவல்
May 21 2022 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த நிறத்தைப் போன்ற அபூர்வ மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த நிறத்தைப் போன்ற மழை அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்யும் என்றும், கனமழை பெய்து பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.