தென்காசி அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் : இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி
Sep 28 2023 7:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெறிநாய் கடித்து குதறியதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கடையநல்லூரில் ஏற்கனவே வெறிநாய் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் சிலர் கடைக்கு சென்று வரும்போது அங்கு சுற்றி திரிந்த வெறிநாய்கள் அவர்களை கடித்து குதறின. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் இருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.