தூத்துக்குடி ரயில் நிலைய நடை மேடையின் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்து : தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
Sep 28 2023 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ரயில் நிலைய நடை மேடையின் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை இறக்கி விட்ட பின்பு நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையின் அருகில் புதர் மண்டி கிடந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.