காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் : சாலை தடுப்பில் மோதி கால்வாயிலில் மூழ்கிய கார்
Sep 28 2023 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கால்வாயில் கவிழ்ந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனை, கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கால்வாயில் மூழ்கிய காரை JCB வாகன மூலம் மீட்டனர். பின்னர், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆவடியை சேர்ந்த அர்ஜூன் என்பவர், தனது நண்பர்களுடன் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்றதால் கால்வாயில் மூழ்கியது தெரியவந்தது. இதில் காரில் பயணித்த நபர்கள் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.