இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்து, வேளாண் துறையில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ள, பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு, யாராலும் ஈடுசெய்ய முடியாதது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தவர் - அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு பங்களித்தவர் - அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியவர்.
உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முதல் உலக உணவு பரிசைப் பெற்ற பெருமைக்குரியவர் - மேலும், வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ஆசியாவின் நோபல் விருதான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் - இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் ஏராளமான கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்று தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத் துறைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் - தனது சமூக நல நடவடிக்கைகளின் மூலம், தமிழக மக்களின் தேவையை பூஜ்ஜிய விலையில் பூர்த்தி செய்துள்ளார் என்று, நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அவர் புகழாரம் சூட்டியதையும் இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது விஞ்ஞான ஆராய்ச்சிகளால் பயனடைந்த எண்ணற்ற விவசாய பெருங்குடி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.