சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிபோட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கு : முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Sep 28 2023 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிபோட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற விவகாரத்தில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த சோழன் - வனஜா தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர், இருவரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபாயையும் திருடிவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பக்ருதீன், ராமர், ராதா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 20 சவரன் நகை, 5ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான புருஷோத்தமன், திலீப், ராஜு ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.