திருவண்ணாமலை அருகே அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டடம் : அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை
Sep 23 2023 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போளூரை அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயம் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் இல்லாமல் பொறுப்பாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த ஆசிரியர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருவதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இந்த அங்கன்வாடியில் கழிவறை வசதி இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.