திருவள்ளூர் அருகே இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம் : மனைவியே கொலை செய்தது அம்பலம் - தலையணை வைத்து கொலை செய்த மனைவியை கைது செய்த போலீஸ்

Sep 23 2023 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்த ரமேஷ், குடிப்பழக்‍கத்திற்கு அடிமையான நிலையில், கடந்த சில நாட்களுக்‍கு முன்பு படுக்‍கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரமேஷின் பிரேத பரிசோதனையில், அவர் மூச்சுத் திணறி இறந்ததாக தடயங்கள் இருந்ததையடுத்து, அவரது மனைவி தங்கலட்சுமியிடம் போலீசார் கிடுக்‍கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் தனது கணவரை முகத்தில் தலையணை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00