கள்ளக்குறிச்சி அருகே 2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார் : தப்பி ஓடிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு
Sep 23 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்த போலீசார், தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கீழ் வடக்கில் உள்ள கூட்டாறு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை கண்டறிந்த போலீசார், அதனை அப்பகுதியிலேயே கொட்டி அழித்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.