தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
Sep 23 2023 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் வரும் 26ம் தேதி 20ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காவல் கண்காளிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வெங்கடேச பண்ணையாரின் நினைவு நாளான வரும் 26ம் தேதி மனித உயிருக்கும், பொது உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை பயன்படுத்துதல் கூடாது என்றும் மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.