தருமபுரியில் பெர்ஃபெக்ட் விஷன் சிட்ஸ் நிறுவனத்தில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை : பண மோசடி தொடர்பாக எழுந்த புகாரையடுத்து தொடர் விசாரணை
Jun 8 2023 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிதி மோசடி செய்ததாக தருமபுரியில் உள்ள பெர்ஃபெக்ட் விஷன் சிட்ஸ் நிறுவனத்தில் போலீசார் சோதனையிட்டனர். தருமபுரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பெர்ஃபெக்ட் விஷன் சிட்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்ததாக, சிலர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து நிதி நிறுவனம் நடத்திவந்த முக்கிய நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பென்னாகரம் சாலையில் மூடப்பட்டிருந்த சம்மந்தப்பட்ட நிறுவனத்தில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். மேலும் பூனையானூர், போச்சம்பள்ளி, ஏலகிரி உள்ளிட்ட இடங்களிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.