கேரளாவில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த தேங்காய் லாரி சாலையோர கடைக்குள் புகுந்து விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய கடை ஊழியர்கள்
Jun 8 2023 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த தேங்காய் லாரி சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பினோய் என்ற லாரி ஓட்டுநர், கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், கடையின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தன. இதில், அதிஷ்டவசமாக கடை ஊழியர்கள் உயிர் தப்பினர்.