சென்னையில் சமூக இணைப்பு எனும் தலைப்பில் ஒரு வார பிரச்சார தொடக்க விழா : மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த Road Show நிகழ்ச்சி
Jun 5 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தரமணி சிஎஸ்ஐஆர் வளாகத்தில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சமூக இணைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இந்திய தரநிலைகள் பணியகத்தின் தெற்கு மண்டல இணை இயக்குனர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வகங்கள் குறித்து மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ரோட் ஷோ நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் இயக்குனர் ஆனந்தவள்ளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், தலைமை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.