கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க க்யூஆர் கோடு வசதி : கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி கொள்ளலாம்
Jun 5 2023 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளில் கியூஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த "க்யூ.ஆர் கோடு" மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி கொள்ளலாம் என்ற வசதி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.