தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பனை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடக்கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு
Jun 5 2023 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பனை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடக்கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த அரிசி கொம்பன் யானை நேற்று நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் வனத்துறைக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்ட யானையை, நெல்லை களக்காடு முண்டந்துறை காப்பகத்தில் விட வனத்துறை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு களக்காடு, முண்டந்துறை, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் மற்றும் மாஞ்சோலை கவுன்சிலர் சரோஜா ஆகியோர் நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.