திருச்சி அருகே காதலியை பார்க்க வந்த காதலனுக்கு பொதுமக்கள் தருமஅடி : திருடன் என நினைத்து காதலனை தாக்கியதால் காதலி தூக்கிட்டு தற்கொலை
Jun 5 2023 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே காதலியை பார்க்கச் சென்ற காதலனை, திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதால், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி, முசிறி அடுத்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சங்கவியைப் பார்க்க அவரது காதலன் வீட்டிற்கு வந்த நிலையில், அவரை திருடன் என நினைத்து, பொதுமக்கள் பிடித்து தருமஅடி கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சங்கவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கவியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தீராத வயிற்று வலி காரணமான சங்கவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.